விருதுநகர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ மற்றும் அமாவாசை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்,. பிரசித்தி பெற்ற இக்கோவிலானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மழைக்காலங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை.

இந்த நிலையில், பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு மார்ச் மாதம்  19ந்தேதி முதல் 22ந்தேதி வரை நான்கு நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதி, காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.