பழனி:
மிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு இன்று நடைபெறவிருக்கிறது.

தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு மேல் நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் திருமுறை, திருப்புகழ் பாட ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு புனித நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்ட நன்னீர் ஊற்றப்படவுள்ளது. விழாவின் போது ஹெலிகாப்டர் மூலமாக கலசங்கள், கோபுரங்களுக்கு மலர் தூவவும், பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்க 8 இடங்களில் கருவிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விழாவில் அமைச்சர்கள் சேகர் பாபு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, உயர்நீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை உயரதிகாரிகள், ஆதீன மடாதிபதிகள் பங்கேற்கின்றனர்.