சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 186492 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 89,561 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு நேற்றுவரை 1,939 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி மேலும், 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 4 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒருவரும் , கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் தனியார் மருத்துவமனையில் 2 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 4 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒருவரும் , கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் தனியார் மருத்துவமனையில் 2 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.