மதுரை:
பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

முதல்போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறப்பு அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி காலை 10 மணியளவில் நீரை திறந்து வைத்தார். இன்று 900 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

மேலும் கால்வாய் வழியாக 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் 45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், பின்னர் இருப்பை பொருத்தும் தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், 45,041 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.