சென்னை: 
விவசாயிகளுடன் ஒரு நாள் – புதிய திட்டத்தை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்,  விவசாயிகளுடன் ஒரு நாள்  என்ற  புதிய திட்டத்தை  அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.8 கோடி செலவில் 50 சிறப்பு அங்காடிகள் அமைக்கப்படும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பொருட்களைச் சந்தைப்படுத்தச் சிறப்பு அங்காடிகள் அமைக்கப்படும்  என்றும் கரூர், நாகை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ரூ.30 கோடியில் அரசு வேளாண்மைக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.