பாட்னா:  ‘ஒரே நாடு, ஒரே மின் கட்டணம்’ கொள்கை வேண்டும் என  பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் மின்சாரம் வழங்கப்படுவதில் ஒரே நாடு ஒரே கொள்கை திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று  அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதிஷ்குமார்,  மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மற்ற மாநிலங்களை விட, பீகார் அதிக விலைக்கு மின்சாரம் பெறுகிறது. நாங்கள் அதிக விலையில் மின்சாரத்தை வாங்குகிறோம் ஆனால், எங்கள் நுகர்வோருக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்குகிறோம். அதனால்,  நாடு முழுவதும் ஒரே சீரான மின்விகிதம் இருக்க வேண்டும் என வலியுறுத்தியவ்ர,  பீகார் மாநிலத்தில் ஸ்மார்ட் ப்ரீபெய்டு மின் மீட்டர்களை பொருத்த அரசு முடிவு செய்துள்ளது என்றார்.

2005-ல் பீகார் மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தபோது, மாநிலத்தில் வெறும் 700 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது. தற்போது அது 6,738 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று பேசுபவர்களைப் பற்றி நான் கவலைப்பட வில்லை என்று கூறியதுடன்,  பீகார் மாநிலத்தில் மின் நுகர்வோருக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. 2018 அக்டோபரில், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மின் இணைப்பை அரசாங்கம் உறுதி செய்தது.

இவ்வாறு அவர் கூறினார்.