டெல்லி:

ஜல்லிக்கட்டுக்கு தீர்வு காணும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் அனில் மாதவ் ததேவே தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று அவர் அளித்த பேட்டி:
ஜல்லிக்கட்டு தொடர்பாக ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்பினரிடம் கருத்து கேட்கப்படும். அதன் பின்னர் ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும். காளைகளை காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளோம்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.