அண்மையில் மாமல்லபுரத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் விமர்சையாக நடைபெற்றது.

நயன்தாரா – விக்கி திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ அதிகம் வெளிவராத நிலையில் அவை நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்துக்கு பலகோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவர்கள் இருவரும் தாய்லாந்துக்கு தேனிலவு சென்ற புகைப்படங்களை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர்.

தற்போது தேனிலவு முடிந்து நயன்தாரா ஷூட்டிங்-கிற்கு கிளம்பியுள்ளதாக தெரிகிறது.

திருமணத்துக்குப் பின் முதல் முறையாக மும்பையில் ஷாருக்கானுடன் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்தார்.

அப்போது நயன்தாரா-வின் பாதுகாவலர்கள் பத்திரிக்கை புகைப்படக்காரர்களை விரட்டியடித்ததுடன், அவரை நெருங்கவோ படமெடுக்கவோ முடியாதபடி தடுத்தனர்.