புதுடெல்லி:
தேசிய விளையாட்டு விருது விழா இன்று நடைபெறுகிறது.

சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், வாழ்நாள் சாதனையாளருக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் வீரர், வீராங்கனைகளின் பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில், கேல் ரத்னா, அர்ஜூனா உள்ளிட்ட தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார்.