சென்னை:  உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்த தலைவர் நல்லகண்ணு நலமுடன் இருக்கிறார் என  ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான ஆா்.நல்லகண்ணு (வயது 97) வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தற்போது திடீர்  காய்ச்சல் காரணமாக  கடந்த 24ந்தேதி  சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நல்லக்கண்ணு உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.  முழு குணம் அடைந்ததும்  ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.