டில்லி,

டில்லியில் தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் காரணமாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தலைநகர் டில்லி ஜந்தர்மந்திர் பகுதியில் கடந்த 28 நாட்களாக தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

ஏற்கனவே ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்றபோது, பிரதமரை சந்திக்க அனுமதி வாங்கித்தருவதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து இன்று பிரதமரை சந்திக்க எதிர்பார்த்து இருந்தனர்.

இதன் காரணமாக காலை முதலே அமைதியான முறையில் போராடி வந்தனர். பின்னர் பிரதமரை சந்திக்கலாம் என்று அதிகாரிகள் அவர்களை அழைத்துச்சென்று பிரதமர் அலுவலகத்தில் மனு கொடுக்க ஏற்பாடு செய்தனர். பிரதமரை சந்திக்க முடியவில்லை.

பிரதமரை சந்திக்க வைப்பதாக அழைத்து சென்று ஏமாற்றி விட்டனர். பிரதமர் சந்திக்க மறுத்துவிட்டதால், துணி இல்லாமல் ஓடுகிறோம்… இதுதான் எங்களின் பரிதாப நிலை என்று துணிகளை களைந்துவிட்டு நிர்வாணமாக ஓடினர். எங்களுக்கு வேறு வழியில்லை என்பதால் நிர்வாண போராட்டம் நடத்துகிறோம் என்று அய்யா கண்ணு கூறினார்.

இந்த போராட்டம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.