கீழக்கரை: வாட்டர் கேனில் இலங்கைக்க மர்ம பவுடர் இலங்கைக்கு கடத்தல் செய்த விவகாரத்தில் சிக்கிய கீழக்கரை திமுக கவுன்சிலர் மற்றும் அவரது சகோதரர் ஆகிய  2 பேரிடம்,  கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள மண்டபத்தில் வேதாளை கடற்கரை சாலை பகுதியில் கடலோர காவல்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த காரில் கீழக்கரை சங்குலி தெருவை சேர்ந்த சார்பாஸ் நவாஸ் (வயது 42), ஜெயினுதீன் (45) ஆகிய 2 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த கடலோர காவல்படையினர், அவர்களது காரை சோதனை செய்தனர். அப்போது அவர்களது காரில் ஏராளமான பிளாஸ்டிக் தண்ணீர் கேன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் உள்ளே வெள்ளை நிறத்தில் பவுடர் ஒன்று நிரப்பப்பட்டிருந்தது.

விசாரணையில், மர்ம பொருளை தண்ணீர் கேன்களில் அடைத்து இலங்கைக்கு கடத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது. நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது.  இந்த விவகாரத்தில்,  திமுக கவுன்சிலர் மற்றும் அவரது சகோதரரான திமுக துணை செயலாளர் ஆகியோரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் இந்த கடத்தல் சம்பவத்தல் ஈடுபட்டவர், சார்பாஸ் நவாஸ் என்பவர்,  கீழக்கரை நகராட்சியில் 19-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். அவரது சகோதரர் ஜெய்னுதீன் தற்போது திமுக நகர் துணை செயலாளராகவும் முன்னாள் கவுன்சில ராகவும் பணியாற்றிவர். 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உரம் என்று கூறப்படும் அந்த பவுடர், வெள்ளை நிறத்தில் இருந்தது. தண்ணீர் கேனில் அடைக்கப்பட்டதால் இந்த பவுடரை ஆய்வுக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வின் முடிவில் தான் அது என்ன பொருள் என்பது தெரியவரும்.

சார்பாஸ் நவாஸ், ஜெயினுதீன் ஆகிய இருவரும் மண்படத்தில் உள்ள கடலோர காவல்படை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த கடத்தலுக்கு துணையாக இருந்த,  மண்டபம் அருகே உள்ள வேதாளை தெற்கு தெருவைச் சேர்ந்த சாதிக் அலி  தலைமறைவானதாக கூறப்படுகிறது. அவரை  கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர்.

தற்போது ஆய்வு அனுப்பபட்டுள்ள பவுடர் என்னது என்பது குறித்த விவரம் தெரிந்த பின், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வாய்ப்பிருப்பதாக கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஆய்வுக்கு அனுப்பப்பட்ட பவுடர், கோகைன் எனப்படும் போதைப்பொருள் என்பதுதெரிய வந்துள்ளது.  20 லிட்டர் தண்ணீர் அடைக்கும் சுமார்  30 கேன் களில், கோகைன் போதைப் பொருளுக்கான மூலப்பொருட்கள், 360 கிலோ இருந்தன. இதையடுத்து, கீழக்கரை நகராட்சி தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ஜெயினுதீன், 45, தற்போதைய, 19வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சர்ப்ராஸ் நவாஸ், 42, ஆகியோரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு, 360 கோடி ரூபாய். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களை, இலங்கைக்கு கடத்த முயன்று, போலீசார் பறிமுதல் செய்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.