சென்னை,

சை நிகழ்ச்சி நடத்த இலங்கை செல்லவிருக்கும் இளையராஜாவின் வீட்டை முற்றுகை யிடுவோம் என்று  தந்தை பெரியார் திராவிடர் கழகம் தெரிவித்து உள்ளது.

வரும் ஜூலை மாதத்தில் இலங்கையின் கொழும்பு நகரிலும், யாழ்ப்பாணத்திலும் இசை நடைபெற இருக்கிறது.

இந்த இசை நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இளையராஜா கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இலங்கையில் நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சியில் இளையராஜா கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நாளை (14/05/17) இளையராஜா வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து கோவை ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில்,

நாளை காலை 11 மணி அளவில் சென்னையில் உள்ள இளையராஜா வீட்டின் முன் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று  தெரிவித்து உள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலையை எதிர்த்தும் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடாத்தக் கோரியும் தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அதைக் கருத்தில் கொள்ளாமல் இலங்கை உலகை எமாற்ற நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு இசை நிகழ்ச்சி நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற இளையராஜாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில்  இளையராஜா பங்குபெறக் கூடாது என்று போராட்டம் நடைபெறுகிறது.

தமிழீழத்தில் இலங்கை இராணுவத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது நிலங்களை விடுவிக்கக் கோரி இரவு பகலாக பெண்கள் சிறுவர்கள் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதே போல் காணாமல் போன தமிழர்களின் உறவினர்கள்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு நடை பெற இருக்கும் இசை நிகழ்வில் இளையராஜா அவர்கள் கலந்து கொண்டு இசை நிகழ்வு நடத்துவது தமிழர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதாக அமையும்.

எனவே உலகத்தமிழர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து இந்த நிகழ்வை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.