டெல்லி:

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகினார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக டோனி இருந்து வந்தார். டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலி இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக டோனி திடீரென இன்று அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

2011ம் ஆண்டில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.