4ம் தேதி 2019ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாடலிங்கில் ஈடுபட்டு வந்த டெல்லியை சேர்ந்த ஐஸ்வர்யா ஷியோரன் முதன்முறை எழுதிய தேர்விலேயே வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றதும் அல்லாமல் தேசிய அளவில் 93ம் இடம் பிடித்துள்ளார்

ராஜஸ்தானை சேர்ந்தவர் ஐஸ்வர்யா ஷியோரன் டெல்லியில் உள்ள ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் பொருளாதாரம் படித்து பட்டம் பெற்றார். அதன் பிறகு, இந்தூர் ஐ.ஐ.எம்-மில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரி காலத்திலிருந்தே மாடலிங்கில் ஈடுபட்டு வருகிறார்.

2015-ம் அண்டு நடைபெற்ற டெல்லி பிரஷ் ஃபேஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்றார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் போட்டியின் இறுதி போட்டி வரை முன்னேறினார்.