சென்னை: தனது ரஃபேல் வாட்ச் பில் உள்பட,  தி.மு.க. அமைச்சர்களின் ரூ.2 லட்சம் கோடிக்கு மேலான ஊழல் சொத்து பட்டியல் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்படும்‘ வெளியிடப்படும் என கூறிய மாநில பாஜக தலைவர்  அண்ணாமலை கருத்து கந்தசாமிகளாக உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் இன்றைக்கு பேசுகிறார்கள் என கூறினார்.

தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை  மதுரை சென்ற நிலையில், நேற்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் மறைவு குறித்து, தேனியில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று மரியாதை செய்து துக்கம் விசாரித்தார். பின்னர் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர், இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை  சந்தித்தார்.

அப்போது அண்ணாமலையிடம், செய்தியளாக்ரளி,  பா.ஜனதா கட்சியை 420 கட்சி என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் கூறிய அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலினை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவரது தகுதி என்ன? படிப்பு என்ன? அவர் எங்கு போய் என்ன கஷ்டப்பட்டார்? அவர் யாரிடம் போய் என்ன பேசினார். மக்கள் அவரது திறமைக்கு ஓட்டு போட்டார்களா?  என்பதெல்லாம். சேப்பாக்கம் தொகுதி என்பது தொடர்ந்து தி.மு.க. வெற்றி பெறும் தொகுதி. யாரை நிறுத்தினாலும் தி.மு.க. வெற்றி பெறக்கூடிய தொகுதி அது.

இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் ‘நீட்’ பற்றி பேசுகிறார். அவருக்கு நீட் பார் முலாவை சரி செய்யத் தெரியுமா? கேட்டால் அண்ணா பல்கலைக்கழக செனட் மெம்பர் என்கிறார்.

தமிழகத்தில் ஒரு காலத்தில் வல்லுனர்கள் கருத்து சொல்லும் நிலை இருந்தது. ஆனால் இன்று கருத்து கந்தசாமிகளாக உதயநிதி ஸ்டாலின் போன்ற வர்கள் பேசுகிறார்கள்.  பி.ஜே.பி.யை 420 கட்சி என்கிறார். நான் திரும்ப பதில் சொன்னால் அது வேற மாதிரி ஆகிவிடும். அது நன்றாக இருக்காது. முதலில் யார் 420 என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

நான் ஏற்கனவே கூறியபடி,   ஏப்ரல் 14-ந்தேதி தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.  அப்போது, எனது வாட்ச் பில்லில் இருந்து எல்லாம்  வரும்.  ஒவ்வொரு அமைச்சர் பெயரிலும் சொத்து எங்கெங்கு உள்ளது என்ற பட்டியல் விவரமாக வெளியிடப்படும். அதைப் பார்த்து, நீங்கள் ரொம்ப ஆச்சரியப்படுவீர்கள். அவர்களது முதலீடு பிசினஸ், மால், துபாயில் இன்ப்ரா அனைத்தும் அதில் தெரியவரும்.

எனவே ஏப்ரல் 14 அன்று என் வாட்ச் பில்லோடு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் தி.மு.க. அமைச்சர்களின் சொத்து பட்டியல் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்படும். இந்த சொத்து பட்டியல் முழுவதும் இணைய தளத்தில் வெளியிடுவோம். அதன் நகல் பென்டிரைவ் டிவில் பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்படும்.

எனது 10 ஆண்டு வங்கி கணக்கு உள்பட நான் சொன்ன அனைத்தும் அதில் வரப் போகிறது. அதை பார்த்ததற்கு அப்புறம் 420 யார் என்று தெரியும். அன்றைக்கு நீங்கள் கேள்வி கேளுங்கள் 420 யார் என்று பேசிக் கொள்ளலாம்.

கூட்டணி விவகாரத்தில் யாரிடமும் தொங்கிப் பிழைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பை முடித்து கிளம்பிய அண்ணாமலையைச் சந்தித்த, அதிமுக அம்மா பேரவையினர், தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்

இவ்வாறு அவர் கூறினார்.