சென்னை: சீறி வரும் மாண்டஸ் புயல் காரணமாக, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளத. அதன்படி,  3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்டும்,  8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும்,  16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்டும்  விடுக்கப்பட்டுள்ளது…

வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல்  மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல், இன்று இரவு மாமல்லபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்க உள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று  சூறாவளியுடன் அதி கன மழை பெய்யும் என என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதைத்தொடர்ந்து பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், மஞ்சள் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

ரெட் அலர்ட்:

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு அலர்ட்:

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை முதல் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கும் இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் அலர்ட் :

தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ஆகிய 16 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.