டெல்லி: 2நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தொலைபேசி மூலம் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்  சோனியா காந்தி கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இந்த நிலையில், டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசுமுறைப் பயணமா டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டள்ள காங்கிரஸ் கட்சயின் தலைவி சோனியாகாந்தியிடம் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.