சென்னை: தமிழ்நாடு அரசின் ‘முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்’ குறித்து அதிகாரிகளுடன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். முத்திரை பதிக்கும் தமிழ்நாடு அரசன் திட்டங்கள் குறித்து 2 மாதங்களுக்கு ஒருமுறை நானே நேரடியாக ஆய்வு செய்வேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அதன்படி, அந்த திட்டங்கள் தொடர்பான அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடன்று ஆய்வு மேற்கொண்டார்.  இதில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள்பங்கேற்றனர்.. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தக்கூடிய முக்கிய திட்டங்களின் செயல்பாடுகள், மாவட்ட அளவில் திட்டத்தின் பயன்கள், பயனாளிகளை சென்று அடைந்திருக்கிறதா என்பது குறித்தும், துறை ரீதியாக கருத்துக்களை பெற்று, நேரடியாக மண்டல அளவிலான ஆய்வுகள் நடத்தப்பட்டதா என்பது குறித்து ஆலோசனை  நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில்,  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு, அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்த திட்டங்கள், தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வரக்கூடிய திட்டங்கள், பயனாளிகளின் எண்ணிக்கை, இந்த திட்டத்தை மேம்படுத்தி எப்படி மாற்றி அமைக்கலாம், பயனாளிகளின் தரப்பு கருத்துக்கள் என்ன என்பது குறித்து இந்த ஆய்வு கூட்டத்தில் விரிவான ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தின் முடிவில் திட்டங்களின் செயல்பாடுகள், அவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்தார்.