சென்னை

ரும் 28 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் 137ஆம் ஆண்டுவிழாவை சிறப்பாகக் கொண்டாடத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிக்கையில் அவர், “வரும் 28 ஆம் தேதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 137-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.  நமக்கு .காங்கிரஸை முன்னிலைப்படுத்தவும் காங்கிரஸ் தலைவர்களின் பெருமையை வெளிப்படுத்தவும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.  காங்கிரஸுக்குச் சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பெருமை உண்டு.

காங்கிரஸ் கட்சியினர் இந்த சந்தர்ப்பத்தில், இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், திட்டங்களையும் மக்களிடையே பரப்புகிற வகையில் கட்சியின் நிறுவன நாளை கொண்டாட வேண்டும்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் காங்கிரஸ் நிறுவன நாள் நிகழ்ச்சிகள் கட்சியின் அனைத்து நிலைகளிலும் மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம குழுக்கள் வரை நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் முதல் கிராமங்கள் வரையிலும், அலுவலகங்கள், பொது இடங்களிலும் காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.  கட்சியின் முன்னோடிகள் முன்னோடிகள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள் துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் முழுமையான ஈடுபாட்டுடன் வரும் டிசம்பர் 28-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாளை மிகச் சிறப்பாக நடத்தும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

சென்னையில் வரும் 28-ம் தேதி தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் 150 அடி உயரக் கொடிக்கம்பத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்ற இருக்கிறேன். அப்போது சேவா தள அணிவகுப்பு மரியாதை நடைபெறும்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.