சென்னை:

காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமயை£ தெரிவித்துள்ளார்.

மேட்டூரில் குறைந்த அளவில்தான் தண்ணீர் உள்ளது. அதனால் 15 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கோரி கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பதிலளித்த சித்தராமையா, ‘‘கர்நாடகத்துக்கு தேவைப்படும் தண்ணீர் அளவை விட குறைவாகவே இருக்கிறது. அதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது. இது குறித்த வழக்கில் அடுத்த மாதம் இரு மாநிலங்களுக்கும் நல்ல தீர்ப்பு வரும் என நம்புவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.