ஜல்லிக்கட்டை தடை செய்த உச்சமன்ற நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ண பணிக்கருக்கு பீட்டா அமைப்பு விருது அளித்து பாராட்டியது தற்போது தெரிய வந்துள்ளது.

 

இது தொடர்பாக 2014-ம் ஆண்டு பீட்டா அமைப்பு வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் “எந்த ஒரு விளையாட்டிலோ, அல்லது ஜல்லிக்கட்டிலோ, அல்லது போட்டியிலோ காளைகளை பயன்படுத்த கூடாது. விலங்குகள் மதிக்கப்பட வேண்டும் “ என்று  பீட்டா இந்தியாவுக்கும் , இந்திய விலங்குகள் நல வாரியத்திற்கும் ஆதரவான முறையில் வரலாற்று சிறப்பு மிகுந்த தீர்ப்பை வெளியிட்ட, ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை விசாரித்த பெஞ்ச்சின் தலைமை நீதிபதி கே.எஸ். பணிக்கர் ராதாகிருஷ்ணனுக்கு (ஓய்வு) 2014-ம் ஆண்டுக்கான “இந்தியாவின் சிறந்த மனிதன்” என்ற விருது பீட்டாவின் சார்பில்  வழங்கப்படுகிறது.

உயிரினங்கள் மீதும் கருணை வேண்டும் என்று தீர்ப்பளித்த,(ஓய்வு பெற்ற )  நீதிபதிகள் பணிக்கர், பெர்னாண்டஸ் போன்றவர்கள் இந்த சமூகத்திற்கான  முன் மாதிரிகள். விலங்குகள் மீது அன்பு காட்ட வேண்டும் என்று அவர்கள் நமக்களித்த சட்டத்தை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்.”

என்று பீட்டாவின் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுளளது.

பீட்டா அறிவிப்பு லிங்க்: http://www.petaindia.com/blog/peta-man-woman/

ஜல்லிக்கட்டு தீர்ப்பின் லிங்க்:http://judis.nic.in/supremecourt/imgs1.aspx?filename=41513