பீகார்:
பீகாரில் ஜேடி(யு)-ஆர்ஜேடி தலைமையிலான ‘மகாத்பந்தன்’ (மகா கூட்டணி) நாளை மாலை 4 மணிக்கு பதவியேற்க உள்ளது.

பீகாரில், மகாபந்தன் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ்குமார் தேர்வாகியுள்ளார். இந்த கூட்டணியின் மூலமாக பெரும்பான்மை பலம் உள்ளதால், மீண்டும் பீகார் மாநிலத்தின் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
இதையடுத்து பீகார் மாநில கவர்னரை சந்தித்து, ஆட்சியமைக்க நிதிஷ்குமார் உரிமை கோரியுள்ளார்.

இந்நிலையில், பீகாரில் ஜேடி(யு)-ஆர்ஜேடி தலைமையிலான ‘மகாத்பந்தன்’ (மகா கூட்டணி) நாளை மாலை 4 மணிக்கு பதவியேற்க உள்ளது.