சென்னை,

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த மாதம் 5ந்தேதி மரணமடைந்தார். முன்னர் அவர் 75 நாட்களாக அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க உத்தரவிட கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இன்று விசாரணைக்கு வந்த அந்த மனுவை விசாரித்த நீதிபதி, பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.