rumor
சென்னை,
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய தூத்துக்குடிய சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறைவு காரணமாக கடந்த மாதம் 22-ந்தேதி நள்ளிரவு அப்பல்லோ வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் பற்றியும், சிகிச்சை முறை குறித்தும் அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் அவ்வப் போது தகவல்கள் தெரிவிக் கப்பட்டு வருகிறது.
லண்டன் டாக்டர் பீலே, எய்ம்ஸ் மருத்துவ குழுவினர்கள், சிங்கப்பூர் மருத்துவர்கள் இவர்களுடன் அப்பல்லோ மருத்துவ குழுவினரும் இணைந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். படிப்படியாக அவர் குணமடைந்து வருகிறார்.
இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவகத்தில் அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு சார் பில் புகார் அளிக்கப்பட்டது.
rarest
போலீசாரும் இதுகுறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது. மேலும் வதந்தி பரப்பிய 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
யுடியூப், பேஸ்புக், வாட்ஸ்-அப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக தவறான தகவல்களை பரப்புவோர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்தி பரப்பியவர் களை பிடிக்க சென்னை மாநகர போலீசில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் தனிப்படையினர் சமூக வலைதளங்களை கண்காணித்து வதந்தி பரப்புவோர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
வதந்தி பரப்பிய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னை எண்ணூரில் 2 நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் ஜெயலலிதா உடல்நிலை பற்றி அவதூறாக பேசிய அக்கட்சி நிர்வாகி ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து தூத்துக்குடியை சேர்ந்த சகாயம் என்பவர் தனது பேஸ்புக்கில் ஜெயலலிதா உடல்நிலை பற்றி தவறான தகவல்களை பதிவு செய்து இருந்ததை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர். ‘
இதனையடுத்து நேற்று இரவு சென்னை சைபர் கிரைம் போலீசார் சகாயத்தை கைது செய்தனர். இன்று அவர் கோர்ட் டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்தி பரப்பியதாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வதந்தி பரப்பியவர்களை கைது செய்வதற்கு திமுக, பாமக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.