சென்னை:

2016ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியதாக தகவல்கள் வெளியாகின. திவாகரன் கூறியதாக எழுந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அப்பலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ 2016 டிச.5-ம் தேதி ஜெயலலிதா மரணத்தை அறிவித்ததில் மருத்துவ நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது.

டிசம்பர் 5 ஆம் தேதி தான் ஜெயலலிதா மரணம் அடைந்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக உண்மையைதான் தெரிவித்து உள்ளோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.