ஸ்ரீஹரிகோட்டா: 2022ம் ஆண்டு ஆகஸ்டில் ‘சந்திரயான்3’ விண்ணில் ஏவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக  இஸ்ரோ தகவல் வெளியிட்டு உள்ளது. ஜிஎல்வி எம்.கே.3 ராக்கெட் மூலம் சந்திரயான்2 விண்ணில் ஏவப்பட உள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்கான முயற்சியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 22-ம்தேதி ஹரிகோட்டாவில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வுசெய்ய சந்திரயான்-2 விண்கலத்தை  விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பிறகு, செப்டம்பரில் நிலவை நெருங்கியபோதிலும், நிலவில் சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் கலன் திட்டமிட்டபடி தரையிறங்கவில்லை. தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் வேகமாக சென்று நிலவின் தரையில் மோதியதாக கூறப்பட்டது. இதனால் விண்கலம் செயலிழந்தது. அதேவேளைய்ல,  விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நி வின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, நிலவை ஆர்பிட்டர் ஓராண்டாக சுற்றிவந்து ஆய்வு செய்வதுடன், பல்வேறு அரிய புகைப்படங்களையும் அனுப்பி வருகிறது.

இதையடுத்து சந்திராயன் 3யை செலுத்த இஸ்ரோ தயாராகி வந்தது. இதற்காக ரூ.615 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், ஆர்பிட்டர் கிடையாது. ஏற்கனவே சந்திரயான்2 ல் உள்ள  ஆர்பிட்டர் ஏற்கெனவே நிலவை சுற்றிவருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் விண்கலன்களை மட்டும் அனுப்ப திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

முதல்கட்டமாக   இதை 2020ம் ஆண்டு இறுதியில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனாதொற்று பரவல் காரணமாக, பணிகள் தாமதமடைந்தால், அதை ஏவுவதில் சிக்கல் நீடித்து வந்தது. இஸ்ரோவின் ஆய்வுப் பணிகள் சுமார் 6 மாத காலம் வரை முடங்கின. இதனால் சந்திரயான்-3 உள்ளிட்ட திட்டங்களை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ராக்கெட்ஏவுதல், செயற்கைக் கோள் தயாரிப்பு உள்ளிட்ட செயல்பாடுகளை இஸ்ரோ தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சந்திராயன்3 வரும் ஆகஸ்ட் மாதம் ஏவப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஆகஸ்ட் 2022 இல் GSLV Mk3 ராக்கெட் மூலம் சந்திரயான் 3 ஐ விண்ணில் செலுத்த இஸ்ரோ இலக்கு வைத்துள்ளது என இஸ்ரோ டிவிட் பதிவிட்டுள்ளது.