மாஸ்கோ:

ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி செய்யும் நகரான சுர்குத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

தாக்குதல் நடத்தியவரை போலீசார் சுட்டுக்கொன்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஸ்பெயின், பின்லாந்து ஆகியவற்றை தொடர்ந்து ரஷ்யாவிலும் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது.

சுர்குத்தில் 3.20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்நகரம் மாஸ்கோவின் வட கிழக்கே சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.