கண்ணூர்: “இந்தியாவில் மாநில முதலமைச்சர்களில் இரும்புமனிதராக பினராயி விஜயன் செயல்பட்டு வருகிறார்” என கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) 23ஆவது அகில இந்திய மாநாட்டில் மலையாளத்தில்  உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் முதலில்,  தோழமை உணர்வோடு என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பளித்த தோழர்களுக்குச் செவ்வணக்கம் தெரிவித்தார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் 23-வது தேசிய மாநாடு கேரள மாநிலம் கண்ணனூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இதற்காக இன்று மதியம் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கண்ணனூருக்கு சென்றார். அங்கு சென்ற முதல்வர் ஸ்டாலினை கேரள முதல்வர் பினராயி விஜயன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின்னர் கம்யூனிஸ்டு மாநாட்டில் கலந்துகொண்டு மத்திய – மாநில அரசு உறவுகள் எனும் தலைப்பில் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் உரையாற்றினார். அப்போது, தோழமை உணர்வோடு என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பளித்த தோழர்களுக்குச் செவ்வணக்கம் தெரிவிப்பதாக கூறினார்.

தொடர்ந்து பேசியவர், எண்ட பேர் ஸ்டாலின் என பேசியவர், தொடர்ந்து சில நிமிடங்கள் மலையாளத்தில் பேசினார். அப்போது, மாநில உரிமைகளை காப்பதில் இரும்பு மனிதராக கேரள முதல்வர் பினராயி விஜயன் செயல்படுகிறார். எனக்கு வழிகாட்டும் முதல்வராக பினராயி விஜயன் திகழ்கிறார். சிறந்த மாநில ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர் பினராயி விஜயன். மத்திய அரசை பற்றி கவலைப்படாமல் சிறப்பாக ஆட்சி நடத்துபவர் பினராயி விஜயன்.

இந்தியாவை காப்பற்ற வேண்டும் எனில் முதலில் மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும். மாநிலங்களை பழிவாங்குவதாக நினைத்து மத்திய அரசு மக்களை பழிவாங்குகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி என மாற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆளுநர்கள் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகின்றனர்.  ஆளுநரை வைத்து மாநிலங்களை ஆட்சி செய்ய நினைப்பது முறையல்ல. வேற்றுமைகள் அனைத்தையும் அழித்து ஒற்றைத்தன்மையை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் கூட ஒற்றை தன்மை அதிகாரங்கள் இல்லை மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் கொண்டதாக  இந்திய அரசியல் அமைப்பை மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.