துபாய்: ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைன சென்னை அணி 18.1 ஓவரில்  157 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்றது.

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட 2021 ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடைபெற்ற 35வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது.

துபாயில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு எடுத்தது. இதனால், பெங்களூர் அணி மட்டையுடன் களமிறங்கயிது.  தொடக்க வீரர்களான கேப்டன் விராட் கோலி மற்றும் தேவதூத் படிக்கல் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அதிரடியாக ஆடி வந்தனர். 100 ரன்கள் வரை எந்தவொரு விக்கெட்டும் விழாமல் ஆட்டம் சிறப்பாக தொடர்ந்தது.

ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பிராவோ பந்தில், ஜடடேஜாவிடம் கேட்ச் கொடுத்தார். 41 பந்துகளில் 53 ரன்கள் அடித்திருந்த விராட் கோலி வெளியேறினார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தன.  3வது ஆட்டக்காரராக களமிறங்கயி  அதிரடி வீரரான அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்து, 12 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த படிக்கல் 70 ரன்களை விளாசிய நிலையில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். அடுத்தடுத்து வந்த வீரர்கள், வந்த வேகத்தில் பெவிலியனுக்கு திரும்ப,  பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்து.

சென்னை அணியில் பிராவோ 3, ஷர்துல் தாக்கூர் 2, தீபக் 1 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால், 157 ரன்கள் அடித்தல் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது

சிஎஸ்கேயின்  தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ் இருவரும் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  சாஹல் வீசிய பந்தில் ருதுராஜ் கோலியிடம் கேட்சை கொடுத்து 38 ரன்னில் வெளியேறினார். அடுத்து டு பிளெசிஸ் சைனியிடம் கேட்சை கொடுத்து 31 ரன்னில் வெளியேறினார். இதனால், சிஎஸ்கே அணி தள்ளாடியது. தொடர்ந்து இறங்கயி  மெயின் அலி வழக்கம்போல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில்,  2 சிக்ஸர் என மொத்தம் 23 ரன் எடுத்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து களத்தில் இறங்கிய அம்பதி ராயுடு அசத்தாக ஆடத்தொடங்கினார். அவர் 32 ரன்கள் எடுத்திருந்தார்.

இறுதியாக சென்னை அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 157 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேன் ஆப் தி மேட்ச் ஆக சிஎஸ்கே வீரர் பிராவோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனால், 2-ம் இடத்தில் இருந்த சென்னை 14 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது.