வாஷிங்டன்:

அமெரிக்காவில் கொலை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இந்திய அமெரிக்கர் ஒருவருக்கு பிப்ரவரியில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.

ஆந்திர பிரதேசத்தினை சேர்ந்தவர் ரகுநந்தன் யண்டமுரி (வயது 32). பொறியாளர். இவர் எச்1பி விசாவில் அமெரிக்கா சென்றார்.

61 வயது நிறைந்த இந்திய பெண் மற்றும் அவரது 10 மாத பேத்தி ஆகியோரை பணம் பறிக்கும் திட்டத்துடன் கடத்தி கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 2014ம் ஆண்டு இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவருக்கு வரும் பிப்ரவரி 23ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. அமெரிக்காவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் முதல் இந்திய அமெரிக்கராவார்.

2015ம் ஆண்டு பென்சில்வேனியா ஆளுநர் டாம் உல்ஃப் மரண தண்டனைக்கு தடை விதித்துள்ள நிலையில் அவர் தண்டனையில் இருந்து விடுவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பென்சில்வேனியாவில் கடந்த 20 வருடங்களில் எந்த மரண தண்டனையும் நிறைவேற்றப்படவில்லை. 1976ம் ஆண்டு முதல் 1995 மற்றும் 1999ம் ஆண்டுகளுக்கு இடையே 3 பேருக்கு மட்டுமே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.