அகமதாபாத்:
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

அகமதாபாத்தில் நடந்த 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. பின்னர் 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 12.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் 3 டி20 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.