ஐதராபாத்:
மூன்றாவது ‘டி-20’ போட்டியில்சூர்யகுமார், கோஹ்லி அரைசதம் விளாச, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. தொடரை 2-1 என வென்று, கோப்பை கைப்பற்றியது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் சர்வதேச மைதானத்தில் நடந்தது.
இந்த போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி ‘பீல்டிங்’-கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 186 ரன் எடுத்தது.

186 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 187 ரன் எடுத்து வெற்றி பெற்றது.