ஏவிஎம் சரவணனின் பேத்தியான அபர்ணாவை திருமணம் செய்துகொண்டவர், ஆர்யன் ஷியாம். தற்போது அவர், ‘அந்த நாள்’ என்ற படத்தை தயாரித்து நடித்து உள்ளார்.
‘மிஷ்கின் இயக்கத்தில் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை.
இந்த நிலையில், மிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்தைவிட, பத்து மடங்கு சிறந்த படத்தை உருவாக்க வேண்டும் என சபதம் எடுத்தேன்.
நானே கதை திரைக்கதை அமைத்தேன். தயாரித்து நடிக்கவும் செய்தேன்.
நரபலி மற்றும் பில்லி சூனியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. படப் பணிகள் முழுதும் முடிந்து, கடந்த பிப்ரவரியில் சென்சார் போர்டுக்கு அனுப்பிவைத்தோம்.
நரபலி, பில்லி சூனியம் மற்றும் அதிரடி காட்சிகள் இருப்பதால், சான்றிதழே கொடுக்க முடியாது என்றனர். அதாவது படத்தை திரையிடவே முடியாத நிலை.
பிறகு ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்பினோம். நடிகை கவுதமி தலைமையிலான அந்த கமிட்டி படத்தை பார்த்தது. சில கட்டுகள் கொடுத்து, ஏ சான்றிதழ் அளித்தது.
இதையடுத்து விரைவில் படம் வெளியாகிறது.
அந்த நாள் படத்தை நானே தயாரித்து நடித்திருந்தாலும், ஒரு விசயத்தைச் சொல்ல வேண்டும்.
படத்தில் இதுவரை தமிழ்த் திரைப்படங்களில் வராத அளவுக்கு, அதி பயங்கரமான அதிரவைக்கும் காட்சிகள் பல உள்ளன.
ஆகவே கர்ப்பிணி பெண்கள், பயந்த சுபாவம் கொண்டர்கள் அந்தநாள் படத்தைப் பார்க்காதீர்கள். படத்தின் வசூல் என்பதை விட என்னால் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதால் இதைச் சொல்கிறேன்” என்றார்.