திருச்செந்தூர்:
டிகர் போண்டாமணிக்கு என்னால் இயன்ற உதவியை செய்வேன் என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நேற்று மாலை சாமி தரிசனம் செய்தார்.

அதன்பின்னர் கோயில் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வடிவேலு, நடிகர் போண்டாமணிக்கு என்னால் இயன்ற உதவியை செய்வேன் என்றும், நாய் சேகர் ரிட்டன், மாமன்னன் , சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசியல் நமக்கு தேவையில்லை. சினிமாவில் இருந்து கொண்டே மக்களுக்கு நன்மை செய்யலாம். தமிழக அரசின் ஆட்சி நன்றாக உள்ளது என்றார்.