தன்னை பற்றி மறைந்த முதல்வர் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய உருக்கமான பேச்சு…
சில பெண்கள் இருக்கிறார்கள் , பெரும்பாலான பெண்கள் , இளம் வயதில் தகப்பனை சார்ந்திருப்பார்கள் , பெரியவர்களான பிறகு கணவரை சார்ந்திருப்பார்கள்,
வயதான பிறகு பிள்ளைகளை சார்ந்திருப்பார்கள் , ஆனால் என்னைப் போன்ற சில பெண்மணிகளும் இருக்கிறார்கள்.
நான் யாரையும் சார்ந்திருக்க கூடிய கொடுப்பினை எனக்கு இல்லை .
யாரையும் சார்ந்திருக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு வாழ்க்கையில் அமைய வில்லை .
எப்போதுமே நல்லது என்றாலும் கெட்டது என்றாலும் , எனக்கு நானே தான் முடிவுகளை எடுத்துக் கொண்டு,
வாழ்க்கையில் எது வந்தாலும் நானே தனித்து நின்று சந்தித்துக் கொண்டு, இப்படியே நான் செயல் பட்டுக் கொண்டிருக்கிறேன .
இது என்னுடைய தனித் திறமை என்று நான் சொல்ல மாட்டேன் , இது விதி . தலையெழுத்து .
அ இ அ தி மு க பொதுக் குழு கூட்டத்தில் செல்வி ஜெயலலிதா பேசியது
31-1-2013