சென்னை:
மிழகத்தில் இன்று முதல் 3 நாள் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், சில இடங்களில் கன மழையும் பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.