சென்னை:
மிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளிலும், திருப்பத்துார், திருவண்ணாமலை மாவட்டங்களில்இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், திருச்சி, பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யும்.