சென்னை:

அரசு பஸ் தொழிலாளர் சம்பள பிரச்னை தொடர்பாக பேச்சு நடத்தி நல்ல முடிவு எடுப்பதற்காக மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை சென்னை உயர்நீதிமன்றம் நியமனம் செய்துள்ளது.

சம்பளம், ஓய்வூதிய நிலுவை தொடர்பாக கடந்த ஒரு வாரமாக அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நீதிமன்றம் பல்வேறு எச்சரிக்கைகள் விடுத்தும் போராட்டத்துக்கு முடிவு ஏற்படால் இருந்தது. இதனையடுத்து அரசுக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையில் பேச்சு நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் என்பவரை நியமித்து ?யர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஊதிய உயர்வு காரணி 2.44 மடங்கா அல்லது 2.57 மடங்கா என்பது குறித்து பேச்சு நடத்தி முடிவு செய்வார். அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். இதை ஏற்பட்டு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புவதாக போக்குவரத்து கழக தொழிற்சங்க வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.