சென்னை: வேலூர் மாவட்டத்தில் கட்டப்பட உள்ள மினி டைடல் பூங்கா கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,ஓசூர் சிப்காட்டில் உள்ள ஐநாக்ஸ் ஏர் பிராடக்ட்ஸ் நிறுவனத்தின் திரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலை திறந்து வைத்தார். தொடர்ந்து, சென்னையில் உள்ள ஜி.எக்ஸ். குழுமத்தின் ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்தையும் திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்டத்தில் கட்டப்பட உள்ள மினி டைடல் பூங்கா கட்டடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் 4.98 ஏக்கர் பரப்பளவில் ரூ.30 கோடியில் மினி டைடல் பூங்கா அமைய உள்ளது. தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் புதிய திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து,   ஓசூர் சிப்காட்டில் உள்ள ஐநாக்ஸ் ஏர் பிராடக்ட்ஸ் நிறுவனத்தின் திரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலை திறந்து வைக்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலையை திறந்து வைத்தார்.

அதையடுத்து, சென்னையில் உள்ள ஜி.எக்ஸ். குழுமத்தின் ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.