சென்னை: ஈரோடு கிழக்குதொகுதி சட்டமன்ற உறுப்பினாராக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று மதியம் சாபா நாயகர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பேரவை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில்   அவருக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஈவிகேஎஸ் இளங்கோவன்,  உறுதிமொழி ஏற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.

இந்த பதவி ஏற்பு விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச்செயலாளர் முத்தரசன் மற்றும் ஜவாஹிருதுல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எமஎல்ஏவாக பதவியேற்றத்தால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 18-ஆக. உயர்ந்துள்ளது.

மேலும், 34 ஆண்டுகளுக்கு பின்னர் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈவேராவின் பேரன் ஈவிகேஎஸ் இளங்கோவன், இன்று மதியம் 12மணிக்கு ராகு காலம் கடந்த பிறகு, தனது பதவியை ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.