சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலிலி  டிடிவி தினகரனின் அமமுக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஏ.எம்.சிவபிரசாந்த் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

அதிமுக கூட்டணி சார்பில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. தேமுதிக சார்பில், ஆனந்த் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், டிடிவி தினகரனின் அமமுக கட்சி சார்பில், ஈரோடு மாநகர கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ.எம். சிவபிரகாசம் போட்டியிடுகிறார் என டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.