ஸ்ரீநகர்:

காஷ்மீர் என்கவுன்டரில் 2 லஷ்கர்- இ -தொய்பா பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.

காஷ்மிர் மாநிலம் குப்வாரா மாவட்டம் பாகத்பூரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உள்ளூர் உளவுப் பிரிவு போலீசாருக்க தகவல் கொடுத்தது.

இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர்.

இருதரப்பு சண்டையில் 2 லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது.