சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி மாவட்ட நீதிபதிகளாகப் பணியாற்றிய ஜி சந்திரசேகரன், வி சிவஞானம், ஜி இளங்கோவன், எஸ் ஆனந்தி, எஸ் கண்ணம்மாள், எஸ் சத்திக்குமார் சுகுமார் குரூப், கே முரளிசங்கர், ஆர். என் மஞ்சுளா, டி.வி. தமிழ்ச்செல்வி ஆகிய 9 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தின கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கபபட்டனர்.

இவர்களை 9 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் குழு பரிந்துரை செய்தது.

கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று 9 பேரையும் சென்னை உயர்நீதிமன்றத்தின நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத கோவிந்த் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்றைய தினம் 9 பேரில் 8 பேருக்கு நிரந்தர நீதிபதிகளாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.