சாய் என்ற சொல்லுக்கு ஒரு அற்புத சக்தி உண்டு. ஆம்’’ சாய்பாபா இந்த மந்திரச்சொல்லின் ‘சாய்’ என்ற சொல்லுக்கு, ‘சாட்சாத் கடவுள்.’ என்ற அர்த்தம் உண்டு. இந்து மதத்தினர் இவரை கடவுள் தத்தாத்திரேயரின்     அவதாரமாகக் நினக்கின்றனர்.

சீரடி இவர் சமாதி அடைந்த இடம். இந்த இடம் தற்போது  பல்லாயிரக்கணக்கானவர் பூஜிக்கும் தலமாக இருக்கிறது.

1. ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்:

ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே

சச்சிதானந்தாய தீமஹி

தன்னோ சாய் ப்ரசோதயாத்.

தினமும் தோறும் 11அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை இந்த மந்திரத்தை சொல்ல நன்மைகிடைக்கும்.

2. ஷீரடி சாயி பாபாவின் த்யான ஸ்லோகம்:

பத்ரி க்ராம ஸமத் புதம்

த்வாரகா மாயீ வாசினம்

பக்தா பீஷ்டம் இதம் தேவம்

ஸாயி நாதம் நமாமி.
3. ஷீரடி சாயி பாபாவின் மூல மந்திரம்:

“ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி”.

4. ஸ்ரீ ஷீரடி சாய் பாபா தியானச்செய்யுள்:

சாயிநாதர் திருவடி

ஸாயி நாதர் திருவடியே

ஸம்பத் தளிக்கும் திருவடியே

நேயம் மிகுந்த திருவடியே

நினைத்த தளிக்கும் திருவடியே

தெய்வ பாபா திருவடியே

தீரம் அளிக்கும் திருவடியே

உயர்வை யளிக்கும் திருவடியே.

மேற் கூறிய மந்திரங்களை நாம் சொன்னோம் என்றால் துன்பத்தை போக்கி நல்வாழ்வு தருவார்.