பெய்ஜிங்:

அமெரிக்காவுடன் சீனா நேரடியாக மோதும் நிலை ஏற்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து சீன அரசுக்கு சொந்தமான குளோபல் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தி விபரம்:

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடியாக கடுமையான மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திற்கு உரிய பதிலடியை விரைவாக கொடுக்க சீனா தயார் நிலையில் இருக்க வேண்டும். எதிர்காலத்தில் 2 நாடுகளுக்கு இடையிலான பரிமாற்றம் வழக்கமாக இருக்கும் வகையில் இந்த மோதலில் சீனா வெற்றி பெற வேண்டும்.

நேட்டோ பயனற்றது என டிரம்ப் கூறியுள்ளார்ர். இது பெய்ஜிங்கை அசைத்து பார்ப்பது போல் உள்ளது. இங்கிலாந்து, ரஷ்யாவுக்கு சாதகமாக டிரம்பின் கொள்கைகள் உள்ளது. ஐரோப்பாவை புறக்கணிப்பது போலவும் தெரிகிறது. இது உலக நாடுகளை அச்சுறுத்துவதுடன் சீனாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்த கூடியதாகும்.

சில நாடுகளுடன் உள்ள உறவை சீனா மறுபரிசீலனை செய்வதோடு, வேறு சில நாடுகளுடன் உறவை வளர்க்கும் பணியில் சீனா ஈடுபட வேண்டும். இதன் மூலம் தான் அமெரிக்காவின் செயல்பாட்டை சமாளிக்க முடியும். 40 ஆண்டுகளாக உள்ள சீனா கொள்கையை டிரம்ப் மறுபரீசலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதை ரத்து செய்ய விரும்புவதுடன் அனைத்தையும் மாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரே சீனா என்ற கொள்கையை பெரும்பாலான உலக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.