சென்னை:
வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து, இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடலுார் மாவட்டம், திட்டக்குடி தாலுகாவில், வெலிங்டன் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இதில் இருந்து, இன்று முதல், 120 நாட்களுக்கு, வினாடிக்கு, 175 கன அடி வீதம், பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், கடலுார் மாவட்டத்தில், 24 ஆயிரத்து, 59 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.