பெங்களுரூ:
ர்நாடக மேல்-சபை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களாக நாகராஜ் யாதவ், அப்துல் ஜப்பார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மேல்-சபையில் எம்.எல்.ஏ.க்கள் மூலம் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, 7 பேர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இவர்களது பதவி காலம் அடுத்த மாதம் நிறைவு பெற உள்ள நிலையில், அந்த இடங்களுக்கு தேர்தல் வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி நடக்க உள்ளது.

இதற்கான மனு தாக்கல் கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களாக நாகராஜ் யாதவ், அப்துல் ஜப்பார் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளனர்.