டில்லி:

தமிழக தம்பதியருக்கு கேரளா பெண் தனது குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தது தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் பிறந்து 4 நாளான தனது குழந்தையை கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இவ்விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரிக்க தொடங்கியுள்ளது.

இது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசின் தலைமை செயலாளர், டி.ஜி.பி., கேரள அரசின் தலைமை செயலாளர், கேரளா டி.ஜி.பி., மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சக செயலாளர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.