சென்னை:
முதல்வரின் துபாய் பயணம் குடும்பச் சுற்றுலா என்று ம்முனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி, முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலா போல் உள்ளது என்றும், தமிழ்நாட்டுக்கு நன்மை செய்ய மு.க ஸ்டாலின் துபாய் செல்லவில்லை என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தனிப்பட்ட காரணங்களுக்குக்காக புதிய தொழில் தொடங்க துபாய் சென்றுள்ளதாக மக்கள் பேசுகின்றனர் என்று தெரிவித்த அவர், சர்வதேச வர்த்தக கண்காட்சி முடியும் தருவாயில் அங்கு சென்றது ஏன்? நான் முதல் அமைச்சராக இருந்த போது வெளிநாடு சென்றதை ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், துபாய் சென்றது தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீட்டை ஈர்க்கவா? அல்லது குடும்பத்திற்கு புதிய தொழில் தொடங்கவா? என மக்கள் பேசுகின்றனர் என்று தெரிவித்தார்.